| ADDED : நவ 27, 2025 04:53 AM
திண்டிவனம்: 'தினமலர்-பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், பதில் சொல்,பரிசு வெல் வினாடி வினா போட்டி, திண்டிவனம் காவேரிப்பாக்கத்திலுள்ள நகராட்சி மேல்நிலைபள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியில் நடந்த முதற்கட்ட போட்டியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்று போட்டி நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியை சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார். போட்டியில் 9 ம் வகுப்பு மாணவி ரேவதி, 8 ம் வகுப்பு மாணவி கீதா ஆகியோர் முதலிடத்தையும், 9 ம் வகுப்பு மாணவர்கள் ஓம்பிரகாஷ், அஸ்வின் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டிவனம் லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் ஸ்மைல்ஆனந்த், சங்க நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், சதீஷ், ரமேஷ், அசோக்குமார் ஆகியோர் வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியைகள் மாலா, ரேவதி, வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.