இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்தாண்டு சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விழுப்புரம் இ.எஸ்., லார்ட்ஸ் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் செல்வமணி, மாணவர்களை கவுரவித்து நினைவு பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.