| ADDED : மார் 14, 2024 11:25 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண பாஸ் புதுப்பித்தல் முகாம் வரும் 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் கட்டணமின்றி சென்றுவர இலவச பஸ் பயண அட்டை ஒவ்வொரு நிதி ஆண்டும் புதுப்பித்து வழங்கப்படுகிறது.அதன்படி, இந்த நிதியாண்டிற்கு இலவச பஸ் பயண அட்டை புதுப்பிக்கும் முகாம் வரும் 26, 27ம் தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை பெற்றுள்ளோர் முகாமில் தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் புகைப்படம் 2, இலவச பஸ் பயண அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றோடு பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.