உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ெஹல்மட் விழிப்புணர்வு பேரணி

ெஹல்மட் விழிப்புணர்வு பேரணி

திண்டிவனம்: தமிழகம் முழுவதும் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா நடந்து வருகின்றது. இதையொட்டி நேற்று காலை திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், மரக்காணம் கூட்ரோடு, சாணக்யா பள்ளி அருகிலிருந்து ெஹல்மட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை, திண்டிவனம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் துவக்கி வைத்தார். நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணியில், ஓட்டுநர் பயிற்சி மாணவர்கள், டூ விலர் விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்