| ADDED : டிச 04, 2025 05:32 AM
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் விழா நடந்தது. மயிலம் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு மகாதீபாரதனை நடந்தது.காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் ஏராளமானோர் அங்கப்பிரதட்சணம் செய்தும். அலகு குத்திக்கொண்டும் நேர்த்தி கடனை செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சங்கு கண்ணர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீப வழிபாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த னர். இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.