உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லுார்: பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிப்பாளையம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேக வழிபாடு, கடந்த 30ம் தேதி காலை 6:00 மணியளவில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. இதையடுத்து, 8:30 மணியளவில் கலசங்கள் புறப்பாடாகி, 9:00 மணியளவில் பால கணபதி, அதே வளாகத்தில் உள்ள சிவசக்தி அம்மன், பாலமுருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை