பாணாம்பட்டு கோவில் மகா கும்பாபிஷேகம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பாணாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கும்பாபிேஷக விழா கடந்த 17ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஹோமங்களும், தன பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து, கடம் புறப்பாடாகி காலை 10.20 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.