மெக்கானிக் தற்கொலை
விழுப்புரம் : விழுப்புரத்தில் 'ஏசி'மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், கே.கே.,ரோடு கணபதி நகரைச் சேர்ந்தவர் சரவணன், 45; 'ஏசி'மெக்கானிக். இவர், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதியடைந்து வந்தார். இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.