உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகராட்சி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

நகராட்சி ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

கோட்டகுப்பம்: கோட்டக்குப்பத்தில் நகராட்சி ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரிய கோட்டக்குப்பம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் எட்டியான், 58; கோட்டக்குப்பம் நகராட்சி துாய்மைப் பணியாளர். குடிப்பழக்கம் உள்ள இவர், 2 மாதங்களாக சர்க்கரை நோய் அதிகமாக இருந்ததால் குடிப்பழக்கத்தை விட்டு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வேலைக்குச் சென்ற அவரது மருமகள் மகேஸ்வரி, நேற்று மதியம் 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, எட்டியான் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை