மேலும் செய்திகள்
காட்டுப்பன்றியின் மீது ஆட்டோ மோதி 7 பேர் காயம்
18-Aug-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். 4 பேர் காயமடைந்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கலாம் மகன் யூசப், 21; பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு 9:50 மணியளவில் அவரது தங்கை பிரியாவுடன் பைக்கில் கடலுார் - சித்துார் சாலையில் டி.எடப்பாளையம் பஸ் நிறுத்தம் வழியாக சென்றார். அப்போது எதிரே வந்த ஆட்டோ, யூசப் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், யூசப், பிரியா, ஆட்டோ ஓட்டுநர் பைசல் ரகுமான், மற்றும் ஆட்டோவில் வந்த ஆசிப், சமீர் ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். உடன், 5 பேரையும் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யூசப் இறந்தார். மற்ற நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Aug-2025