| ADDED : ஜன 08, 2024 05:11 AM
விழுப்புரம்; காணை அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த வெங்கந்துாரைச் சேர்ந்தவர் பார்த்திபன், 30; இவரது மனைவி அழகம்மாள், 26; இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.கடந்த 20 நாட்களுக்கு முன், கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, அழகம்மாள், கருங்காலிப்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில், கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து, கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர், வீடு திரும்பவில்லை. கணவர் வீட்டிற்கும் செல்லவில்லை.இது குறித்து, அவரது தந்தை ராமு, 55; கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.