உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: இன்று விசாரணை

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: இன்று விசாரணை

விழுப்புரம்,: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணை நடக்கிறது.கடந்த 2006-2011ம் ஆண்டு நடந்த தி.மு.க., ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டது.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கடந்த 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கில் தொடர்புடைய ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார் மட்டும் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை.வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், விசாரணையை இன்று 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ