உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் ஸ்டேண்ட் எதிரே நடைபாதை ஆக்கிரமிப்பால் அவதி

பஸ் ஸ்டேண்ட் எதிரே நடைபாதை ஆக்கிரமிப்பால் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரேவுள்ள திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இங்குள்ள பஸ்கள் நிறுத்தும் இடத்திற்கு வெளியேவுள்ள தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் சில நடைபாதையை ஆக்கிரமித்து கடைபோட்டுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் சாலையில் நடந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. நெடுஞ்சாலை துறை, பல முறை ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில், சிலர் மீண்டும் அதே இடத்தில் கடைகளை வைத்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை