உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அன்னா ஹசாரேவுக்கு கிராம மக்கள் ஆதரவு

அன்னா ஹசாரேவுக்கு கிராம மக்கள் ஆதரவு

திருவெண்ணெய்நல்லூர் :திருவெண்ணைநல்லூர் அருகே அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.குன்னத்தூர் கிராமமக்கள் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் அடையாள உண் ணாவிரதம் இருந்தனர். அப்பகுதியின் பஸ் நிறுத்தம் அருகே காலை 8 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்திற்கு ஏழுமலை தலைமை தாங்கினார். ரேணுதேவன், முருகேசன் முன்னிலை வகித்தனர். மக்கள் இயக்கம் கிளை செயலாளர் தீர்த்தமலை மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். சாந்தமூர்த்தி, மணிவேல், குரு, ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை