உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்குதிண்டிவனத்தில் பாராட்டு விழா

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்குதிண்டிவனத்தில் பாராட்டு விழா

திண்டிவனம்:தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பணி ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்கு பாராட்டு விழா திண்டிவனத்தில் நடந்தது.திண்டிவனம் வட்டத் தலைவர் தனுசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், துணை செயலாளர் அனந்தக்குமார், மாவட்ட துணை தலைவர் செல்வதுரை முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார்.மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அருளாசி வழங்கினார். டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் நினைவு பரிசு வழங்கி பேசினார். ஆர்.டி. ஓ., மீனா பிரியதர்சினி, தாசில் தார் ஜோதி பேசினர்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜமாணிக்கம், மாநில துணைத் தலைவர் மனோகரன், மாநில பொது செயலாளர் மதிவாணன், மாநில செயலா ளர் வேணுகோபால், மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் திருமாறன், மாவட்ட பிரசார செயலாளர் கமலக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினர்.பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களின் சார் பில் திருவக்கரை நாகராஜன் ஏற்புரையாற்றினார். வட்டார பொருளாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி