உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சூளை அதிபர் கொலை வழக்கில் தந்தை, மகன் உட்பட 6 பேர் கைது

சூளை அதிபர் கொலை வழக்கில் தந்தை, மகன் உட்பட 6 பேர் கைது

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் ஞானசேகரை 27, கொலை செய்ததாகதந்தை, மகன் உட்பட6 பேரை போலீசார் கைது செய்தனர்.ராஜபாளையம் அருகேஇடையன்குளத்தை சேர்ந்தவர்ஞானசேகர். கோதை நாச்சியார்புரத்தில்செங்கல் சூளைநடத்தி வந்தார். இவரதுசெங்கல் சூளையில்வேலைபார்த்த அதே பகுதியை சேர்ந்தமுருகதாஸ், வேலையை விட்டு நிறுத்தியதால் மகன் மணிகண்டன் உடன் வேறு சூளைக்கு சென்று விட்டார். மணிகண்டன் செல்லும்போது ஞானசேகரின் சூளையில் தான் வளர்த்து வந்த புறாக்களை விட்டு சென்று விட்டார். சில நாட்களுக்கு முன் தான் வளர்த்த புறாக்களை எடுத்துச் செல்வதற்காக திரும்பி வந்து கேட்டபோது பறந்து விட்டதாக ஞானசேகர் கூறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மே 11 இரவு சூளையில் இருந்த ஞானசேகரை நண்பர்கள் நாகராஜ், பேச்சிமுத்துவுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்து தப்பினார்.வடக்கு போலீசார் மணிகண்டன் 21, நாகராஜ் 24, பேச்சிமுத்து 24 மூவருடன் கொலைக்கு திட்டம் தீட்டி கொலையாளிகள் தப்பிச்செல்ல உடந்தையாக இருந்த முருகதாஸ் 52, அரிச்சந்திரன் 27, முத்துப்பாண்டி 47, ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை