10 பேர் மீது வழக்கு
காரியாபட்டி: மல்லாங்கிணரைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித் குமார் 27, ஜெயபீட்டர் 36. இவர்களுக்குள் சில நாட்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் தகாத வார்த்தையில் பேசி, இரு குடும்பத்தினரும் கம்பு, கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெயபீட்டர், சமாதான பிரபு மீதும், மகேந்திரவேல், ரஞ்சித் குமார், முத்துவேல், வெங்கடேஷ், ஆகாஷ், சிவராஜன், மனோஜ்குமார், ஜான்கென்னடி மீதும் மல்லாங்கிணர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.