| ADDED : ஜூன் 06, 2024 05:32 AM
அருப்புக்கோட்டை : தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் உமா, 50, தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் கெங்கன், 61, இவரும், இவர்களுடைய மகள் சுவேதா, உமாவின் அக்கா வெங்கடலட்சுமி, 64, ஆகியோருடன் காரில் சென்னைக்கு சென்று திரும்பி உள்ளனர்.நேற்று காலை 6.30 மணிக்கு செட்டிகுறிச்சி விலக்கு அருகில் வந்த போது காரின் முன் பக்க டயர் வெடித்ததில் கார் உருண்டது. காயமடைந்த 3 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் கெங்கனை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார். பந்தல்குடி போலீசார் கார் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த பேச்சியப்பன் சிவா 30, விடம் விசாரிக்கின்றனர்.-