உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடும் பணி நேற்று நடந்தது.கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, உதவி ஆணையர் (கூ.பொ) சுரேஷ், பரம்பரை அறங்காவலரகள் முன்னிலையில் கோசாலை உண்டியல் உள்பட 11 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடும் பணி நடந்தது.மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், கோயில் பணியாளர்கள், அலுவலர்கள் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.பக்தர்கள் உண்டியலில் ரொக்கமாக ரூ 58,18,676, தங்கம்102 கிராம், வெள்ளி 474 கிராம் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனர். உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை