உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேது நாராயண பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சேது நாராயண பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நாளை செப்.8ல் நடக்கிறது. விழா ேற்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் நாளை (செப்.8)காலை 7:35 மணிக்கு மேல் 8: 35 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை 6:00 மணிக்கு மகா சுதர்சனம் ,மகாலட்சுமி ஹோமங்கள் சாற்று முறையும், மாலை 4 :35 மணிக்கு மேல் வேத திவ்ய பிரபந்த பாராயணத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.இரண்டாம் நாளான இன்று (செப். 7) காலை 7:45 மணிக்கு மேல் மருந்து சாத்துதலும், 9:00 மணிக்கு மேல் விமான கலச ஸ்தாபனம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 6:00 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.மூன்றாம் நாளான நாளை (செப். 8) காலை 7 :35 மணிக்கு மேல் 8:35 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மேல் கருட சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜோதி லட்சுமி தலைமையில் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி