மேலும் செய்திகள்
அரசு பள்ளியை சோலையாக்கும் லயன்ஸ் சங்கத்தினர்
29-Jul-2024
சாத்துார்:அண்ணா நகர், பெரியார் நகர் இளைஞர்கள் இணைந்து சாலை ஓரங்களில் வீட்டிற்கு ஒருமரம் வரிசையாக வளர்த்து சாதனை புரிந்துள்ளனர். வெயில் சுட்டெரிக்கும் சாத்துாரில் சாலை விரிவாக்க பணி பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் குடிநீர் திட்ட பணிகள் என பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.இதன் காரணமாக நகர் பகுதி முழுவதும் மரங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தன்னார்வ மிக்க இளைஞர்கள் தாங்களாக முன்வந்து தங்களுக்குள் நிதி திரட்டி இழந்த இயற்கை அழகை மீட்க மரக்கன்றுகள் நடத்தொடங்கினர். பெரியார் நகர் அண்ணா நகர் இடையிலான சாலையில் மரக்கன்றுகள் குரோட்டன்ஸ் மரம் செடிகள் அரளிப்பூ செடிகள் வேம்பு, புங்கை, புளிய மரங்கள் என வளர்த்து சோலையாக மாற்றி வருகின்றனர்.கடும் கோடை காலத்திலும் மரத்தின் நிழலில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெப்பத்தை உணராத வகையில் சாலையில் நடந்து செல்கின்றனர். அண்ணா நகரில் மட்டுமின்றி பெரியார் நகர், நான்கு வழிச்சாலை ஒரத்திலும் வைப்பாற்றுக் கரைகளிலும் இளைஞர்கள் மரங்களை வளர்த்து உள்ளனர்.வைப்பாற்றுக் கரையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பனைமர விதைகளை நட்டி உள்ளனர். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற கனவு வாசகத்தை மரம் வளர்த்து நனவாக்கியுள்ளனர்.
அண்ணா நகரில் வளர்ச்சிப் பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட போது வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று அரசு கூறி வந்த நிலையில் இளைஞர்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கு ஒரு மரக்கன்று என வாங்கி வரிசையாக நட்டி ஆடு மாடுகள் தின்னாதபடி பாதுகாத்து வனள அமைத்து வளர்த்தோம். தற்போது மரங்கள் வரிசையாக வளர்ந்துள்ளன.- மதன், தடம் அமைப்பு உறுப்பினர்.
எங்கள் தடம் அமைப்பு மூலம் வைப்பாறு கரையில் 150 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. இந்த பனை விதைகள் வளர்ந்து வருகிறது. பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்டு வணிகவளாகம், பொது சுகாதார வளாக சுவர்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தினோம். சாத்துார் வைப்பாறு பழையபாலத்தினை சுத்தம் செய்து மலர் செடிகள் வைத்து நடை பயிற்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை நகராட்சியிடம் அனுமதி கோரியுள்ளோம்.- மாரிக்கண்ணன், தடம் அமைப்பு உறுப்பினர்.
29-Jul-2024