மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
18 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
18 hour(s) ago
சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரே ஊருணியை துார்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் எதிரே ஊருணி உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு குளிக்க துணி துவைக்க மற்றும் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்த இந்த ஊருணி துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது பெய்த கோடை மழைக்கு ஊருணிக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் ஊருணி முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது.இதனால் தண்ணீர் எதற்கும் பயன்படாமல் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதனால் அருகே உள்ள ஊராட்சி அலுவலகம், இ சேவை மையம் ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருகின்ற மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ஊருணியை துார்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago