உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்

தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி தேசிய மாணவர் படை சார்பில் விருதுநகர் தேசிய மாணவர் படை பட்டாலியன் நிதி உதவியுடன் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பத்து நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். விருதுநகர் 28, தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ராகேஷ் குமார் தலைமையில் பயிற்சி முகாம் நடந்தது. துப்பாக்கி சுடுதல், ஆயுதங்களை பயன்படுத்துதல், வரைபட வாசிப்பு, குழு விவாதம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. 9 கல்லுாரிகள், 13 பள்ளிகளைச் சார்ந்த 487 மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் வீமராஜ், கல்லுாரி தேசிய மாணவர்படை மாணவர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை