உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்தனர். சுவாமி தரிசனம் செய்தவுடன் அடிவாரம் திரும்ப அறிவுறுத்தினர். மதியம் 12:00 மணி வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோயிலில் சுந்தரலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூஜாரிகள் அமாவாசை வழிபாடு பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை