உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நோயாளிகள் மன அமைதிக்காக புத்தர் சிலையுடன், பூங்கா திறப்பு

நோயாளிகள் மன அமைதிக்காக புத்தர் சிலையுடன், பூங்கா திறப்பு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவ மனையில் உள் நோயாளிகள் கவலைகளை மறந்து மன அமைதி பெறுவதற்காக முதல் தளத்தில் புல்வெளி, பூக்கும் தாவரங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டது. நேற்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை டீன் சீதாலட்சுமி தலைமையில் மன அமைதிக்காக புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூங்கா திறக்கப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் அனிதா, மருத்துவமனை நிர்வாக அலுவலர் முருகேசன், உதவி நிர்வாக அலுவலர் முரளிதரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் உட்பட டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை