உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது

விருதுநகர்: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே மருதகிணரைச் சேர்ந்தவர் கலையரசன் 40. கலிங்கப்பட்டி அருகே மகாதேவர்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் 33. இவர்கள் இருவரும் சிவகாசி விளாம்பட்டி காமராஜர் காலனி அருகே வேனில் 40 கிலோ வீதம் 38 மூடைகளில் 1520 கிலோ ரேஷன் அரிசியை தென்காசிக்கு கடத்த முயன்றதை விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் கண்டறிந்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர், வேனை பறிமுதல் செய்து, இருவரையும் விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ