உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாம்பல் நிற அணில்கள் ஸ்ரீவி., மலைப்பகுதியில் கணக்கெடுப்பு

சாம்பல் நிற அணில்கள் ஸ்ரீவி., மலைப்பகுதியில் கணக்கெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்களின் கணக்கெடுப்பு நேற்று முதல் துவங்கியது.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் 1989ல் துவக்கப்பட்டது. இங்குள்ள சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை குறித்து இன்றும், நாளையும் முதல் கட்ட கணக்கெடுப்பு நடக்கிறது.இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு பயிற்சி வகுப்பு புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் தலைமையில் நடந்தது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி வனவியல் துறை மாணவர்கள் 20 பேர் பங்கேற்றனர்.இவர்கள் இன்று வனப்பகுதியை கடந்து தனியார் பட்டா நிலங்களில் உள்ள அணில்களின் எண்ணிக்கை குறித்தும், நாளை வனப்பகுதியிலும் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு ஏப்ரல் 16, 17ல் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் கார்த்திக் தலைமையில் வனத்துறையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sangarapandi
ஏப் 10, 2024 08:35

ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்களின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வரவிக்க வேண்டி ஒன்றுதான். ஆனால் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் என்ற போர்வையில் பேரையூர் தாலுக்கா மல்லப்புரம் வழியாக தாழையூத்து, மயிலாடும்பாறை, வருசநாடு பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நடைபெறுவதற்கு தடையாக உள்ள எல்லா காரணங்களையும் நீக்கி விட்டு பேருந்து போக்குவரத்து நடை பெற அரசு துறைகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன் இப்படிக்கு எஸ் சங்கரபாண்டி ,தொட்டணம்பட்டி ,பேரையூர் தாலுக்கா


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ