ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையா ஊதியம் வழங்குவது, அரசாணை 243ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகணேசன் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணக்குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அழகராஜ் பேசினர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜேஷ் நன்றிக்கூறினார்.