ஆவுடையாபுரம் குடிநீர் ஆப்பரேட்டர் தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையாபுரம் ஊராட்சியில் குடிநீர் ஆப்பரேட்டராக 5 ஆண்டுகளாக பணிபுரிபவர் கருணாகரன். இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து அவரது மனைவி, ஊராட்சி கிளார்க்கிடம் வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்தனர்.