உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்..

விழிப்புணர்வு ஊர்வலம்..

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல' நான் தேர்தல் தேதியில் கண்டிப்பாக வாக்களிப்பேன்' என்ற தலைப்பில் பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம், கையெழுத்து இயக்கம் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதா துவக்கி வைத்தார். தாசில்தார் பாண்டியராஜன் வருவாய்த்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் ரவுண்டானா வழியே ஜவஹர் மைதானத்தில் நிறைவடைந்தது.மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி சென்றதுடன், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, நான் தேர்தல் தேதியில் கண்டிப்பாக வாக்களிப்பேன் என்று கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை