அகழாய்வில் சூது பவள மணி கண்டெடுப்பு
சிவகாசி,:விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், வட்ட சில்லு, தங்க மணி உள்ளிட்ட 2,750க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அலங்கரிக்கப்பட்ட நிலையில் சூது பவள மணி கண்டெடுக்கப்பட்டது. இது வட மாநிலங்களுடன் இருந்த வாணிபத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் ''தற்போது கிடைத்துள்ள சூது பவள மணி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள், ராஜஸ்தான் பகுதியில் மட்டுமே கிடைக்கிறது. அந்த வகையில், இங்கிருந்து வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் வாணிபத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது,” என்றார்.