மழையால் சுவர் இடிந்து சேதம்
ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதியில் மழையால் இரண்டு வீடுகளின் சுவர் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. தளவாய்புரம் அருகே சோலைச் சேரியை சேர்ந்தவர் சரவணன். தொடர் மழை காரணமாக இவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் விழுந்தது. தாயார் வீட்டின் முன்பக்கம் இருந்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. * ராஜபாளையம் லட்சுமிபுரம் தெருவை சேர்ந்தவர் முருகன். தொடர் மழையால் வீடு இடிந்து சரிந்து விழுந்தது. வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.