உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் பக்தர்கள் வழிபாடு

சதுரகிரியில் பக்தர்கள் வழிபாடு

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பவுர்ணமி இரண்டாம் நாளான நேற்று 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் துவங்கிய பவுர்ணமி நேற்று மாலை வரை இருந்ததால் விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரத்தில் குவிந்தனர். இதனால் காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர்.வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டநிலையிலும் மலையேறிய பக்தர்கள் மாலை 4:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்து அடிவாரம் திரும்பினர்.ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை