உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தபால் நிலையங்களில் க்யூ.ஆர்., கோடு அட்டைகள் பெற வசதி

தபால் நிலையங்களில் க்யூ.ஆர்., கோடு அட்டைகள் பெற வசதி

விருதுநகர்: அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜவஹர்ராஜ் செய்திக்குறிப்பு: மத்திய அரசு டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. அதன்படி பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய அளவிலான கடைகளில் கூட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக க்யூ.ஆர்., கோடு அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.இதே வசதியை 'டாக் பே' என்ற பெயரில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான க்யூ.ஆர்., கோடுகளை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இந்தியா போஸ்ட் மேபெமன்டஸ் வங்கி சேமிப்பு கணக்கை தபால் நிலையத்தில் துவங்கும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களிடம் பணம் பெற வசதியாக க்யூ.ஆர்., கோடு அட்டை வழங்கப்படுகிறது. அதற்கு ஆதார் அட்டை, அலைபேசி எண் ஆகியவற்றை மட்டும் கொடுத்து வியாபாரிகள் க்யூ.ஆர்., கோடு அட்டைகளை பெற்று செல்கின்றனர்.இதற்கான சிறப்பு முகாம் தபால் நிலையங்களிலும் நடந்து வருகிறது. தபால் நிலையத்தில் கணக்கு இல்லாதவர்கள் இந்த முகாமில் உரிய ஆவணங்களை கொடுத்து கணக்கு துவங்கி கொள்ளலாம். உடனே அவர்களுக்கு தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ள 'டாக் பே' என்ற க்யூ ஆர்.,கோடு அட்டை வழங்கப்படும். கட்டணம் ஏதும் இல்லை. இந்த சிறப்பு முகாம் மார்ச். 31 வரை நடக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ