உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி வழிபாடும், சந்தன மகாலிங்கம் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு பதினெட்டு சித்தர்கள் பூஜையும் நடந்தது.நேற்று காலை 6:00மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சந்தன மகாலிங்கம் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு திருவாதிரை சிறப்பு பூஜைகளும், 9:00 மணிக்கு மேல் பதினெட்டு சித்தர்களுக்கு பூஜையும் நடந்தது.மாலை 6:00 மணிக்குமேல் சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி பவுர்ணமி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ