உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விபத்து பகுதியாக மாறிய புல்லலக்கோட்டை ரோடு வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிப்பு

 விபத்து பகுதியாக மாறிய புல்லலக்கோட்டை ரோடு வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிப்பு

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் புல்லலக்கோட்டை ரோடு முழுவதும் பேவர் பிளாக் கற்கள் சேதமாகியுள்ளது. பாதாளச்சாக்கடை மேன்ஹோல்கள் இருக்கும் இடங்கள் அனைத்தும் பள்ளங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. விருதுநகரில் இருந்து வி.எம்.சி., காலனி வழியாக புல்லலக்கோட்டை செல்வதற்காக இருந்த ரோடு அடிக்கடி சேதமானதால் நகராட்சியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு புதிதாக ரோடு அமைக்கப்பட்டது. எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் பேவர் பிளாக் கற்கள் ரோடுகள் என்பதால் மழைக்காலங்களில் டூவீலர்களில் டயர்கள் பிரேக் பிடிக்கும் போது நழுவி விடுவதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படும் பகுதியாக மாறியுள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக அமைக்கப்படாத பாதாளச்சாக்கடை திட்டத்தால் ஒவ்வொரு முறையும் மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. மேன்ஹோல் சுற்றி பள்ளங்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த பள்ளங்களில் கழிவு நீர், மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தினமும் அவ்வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளங்களாக உள்ள ரோட்டை கடந்து செல்லும் போது விபத்து, முதுகு வலி உள்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த ரோட்டில் உள்ள பள்ளங்களில் அப்பகுதியில் மண்ணை கொட்டி தற்காலிக சீரமைப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். சீரமைப்பு பணிகள் செய்வதற்கு கூட நகராட்சி நிர்வாகம் தயராக இல்லை. நகரின் பல பகுதிகளில் தற்போது சிறு பாலம், தரைப்பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர். மாவட்ட தலைநகருக்கு தகுதியில்லாத நகராட்சி என அனைத்து மக்களும் குற்றம்சாட்டும் நிலைக்கு உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ