நர்சிங் கல்லுாரி தாளாளர் கைது
அருப்புக்கோட்டை: அங்கீகாரம் இல்லாத தனியார் நர்சிங் கல்லுாரி தாளாளரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் தனியார் நர்சிங் கல்லுாரியில், 222 மாணவியர் படித்து வந்தனர். இக்கல்லுாரிக்கு எம்.ஜி.ஆர்., பல்கலையால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது.தாங்கள் வழங்கிய அசல் சான்றிதழ்கள், கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க கோரி மாணவியர் ஒரு வாரத்திற்கு முன், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால், கலைந்து சென்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட மருத்துவ, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாபுஜி தலைமையில் அதிகாரிகள் கல்லுாரியில் ஆய்வு செய்தனர். அங்கீகாரம் வழங்கப்படாதது தெரிந்தது. தாளாளர் டிக்காக் ஜாக்சன், 39, மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு தெரிவித்த நிலையில், நேற்று டவுன் போலீசார் டிக்காக் ஜாக்சனை கைது செய்தனர்.