உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு

சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி,உதவி ஆணையர் இளங்கோவன் , பரம்பரை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நிரந்தர உண்டியல்கள் 11 தற்காலிக உண்டியல் 3 கோசாலை உண்டியல் 1 ஆகியவை திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடும் பணி நடந்தது.மகளிர் சுய உதவி குழு பெண்கள் கோயில் பணியாளர்கள் அலுவலர்கள் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். ரொக்கம் ரூ 41,72,875, தங்கம் 85 கிராம், வெள்ளி 870 கிராம்.பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தன. உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி