சதுரகிரியில் சூழலை பொறுத்து அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்கு பிரதோஷ நாள் முதல் நான்குநாட்கள் அனு மதிக்கப்படுவது வழக்கம். கார்த்திகை அமாவாசையின் போது பேரையூர் போலீசார் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்தனர்.இதை வனத்துறை மறுத்தது. பிரதோஷம் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் பவுர்ணமிக்கு மழைச்சூழலை பொறுத்து பக்தர்கள் அனுமதி குறித்து முதல் நாள் அறிவிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.