மேலும் செய்திகள்
பால் கொள்முதல் விலையை உயர்த்த கேட்டு ஆர்ப்பாட்டம்
6 minutes ago
அரசு மருத்துவமனைக்கு கண்கள் தானம்
7 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (டிச.30க்குரியது)
7 minutes ago
டெண்டர்களில் தி.மு.க.,வினர் தலையீடு
15 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தேசிய, மாநில, நகராட்சி ரோடுகளில் டூவீலர்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு டூவீலர் ஸ்டாண்டுகளாக மாறி வருவதால் நடந்து செல்லும் மக்கள் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். நகரில் அனைத்து பஜார் வீதிகளிலும் மக்கள் நடந்து செல்லும் பாதைகளில் டூவீலர்கள் நிறுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியூர் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், நகரின் விரிவாக்க புதிய குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் தேசிய, மாநில, நெடுஞ்சாலை ரோடுகளிலும், நகராட்சிக்கு சொந்தமான தெரு ரோடுகளிலும் தங்களது சைக்கிள்கள், டூவீலர்களை காலையில் நிறுத்திவிட்டு மாலையில் வந்து தான் எடுத்துச் செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள ரோடுகள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிகளவில் டூவீலர்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது. இதனால் நடந்து செல்லும் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
6 minutes ago
7 minutes ago
7 minutes ago
15 minutes ago