திரு இருதய சர்ச் ஆண்டு பெருவிழா
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் திரு இருதய சர்ச்சின் ஆண்டு பெருவிழா ஜூலை 4ல் துவங்கி 13ல் முடிவடைந்தது.பாதிரியார் சந்தன சகாயம் தலைமை வகித்தார். அயன் நத்தம் பட்டி பாதிரியார் இளங்கோ அற்புதராஜ் திரு இருதய ஆண்டவரின் கொடியை ஏற்றி வைத்தார். தினமும் திருப்பலியும், சப்பரபவனியும் நடந்தது. ஜூலை 13 இரவு சென்னை சீடர்கள் குடும்ப சபை சேர்ந்த சத்யராஜ் ,பாதிரியார் சந்தன சகாயம் தலைமையில் திருப்பலி, மறையுரையும் நடந்தது. பின் நற்கருணை தேர் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து சர்ச்சை அடைந்தது. பின்னர் ஆசீர்வாதத்திற்கு பிறகு கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா முடிவடைந்தது.