உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயிர் காப்பீட்டில் முறைகேடு கிராம நிர்வாக அதிகாரி டிஸ்மிஸ்

பயிர் காப்பீட்டில் முறைகேடு கிராம நிர்வாக அதிகாரி டிஸ்மிஸ்

திருச்சுழி:அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார், 43, திருச்சுழி அருகே கணக்கி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக இருந்தார். இவர், 2018 - 19ல், கிராமத்தில் உள்ள தனியார் நிறுவன இடத்தை, முறைகேடாக பயிர் காப்பீடு பெறுவதற்கு கிராமத்தில் உள்ள ஒரு சிலருக்கு அந்த நிலத்தில் பயிர் செய்ததாக அடங்கல் கொடுத்தார்.மேலும், தானும், தன் மனைவியும் விவசாயம் செய்ததாக அடங்கல் தயார் செய்து, பயிர் காப்பீடு தொகை, 7 லட்சம் ரூபாய் பெற்றார். விசாரணை செய்ததில், மோசடியாக 30 லட்சம் வரை பயிர் காப்பீடு பெற்றது தெரிந்தது.இதையடுத்து, ஜெயக்குமாரை 'டிஸ்மிஸ்' செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளி கண்ணு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை