உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல் சல்வாடார் தூதர் முதல்வருடன் சந்திப்பு

எல் சல்வாடார் தூதர் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: இந்தியாவுக்கான, எல் சல்வாடார் நாட்டு தூதர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவுக்கான, எல் சல்வாடார் நாட்டு தூதர் ரூபன் இக்னாசியோ ஜமோரா ரிவாஸ், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தார். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்காகவும், தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றதற்காகவும் அவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்துடன் வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்ள தங்களது நாடு விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, எல் சல்வாடார் நாட்டு தூதரக அதிகாரி யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி