உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேஸ்வரம்: கடலில் மீன்பிடிக்கச்சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். முன்னதாக, ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற 50க்கும் மேற்பட்ட படகுகளை, கச்சத்தீவு அருகே சூழ்ந்து கொண்ட இலங்கை கடற்படையினர் அவர்களின் வலைகளை அறுத்தும், மீன்களை கடலில் கொட்டியும் திரும்பச்செல்லும்படி மிரட்டியுள்ளனர். எனினும் மீனவர்கள் மீது கடற்படையினர் எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் மன்னார் அருகே இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயமேற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை