உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி இடைத்தேர்தலில் போட்டியில்லை: வைகோ

திருச்சி இடைத்தேர்தலில் போட்டியில்லை: வைகோ

தஞ்சை: திருச்சி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வை‌கோ தெரிவித்தார். குடந்தையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வரும் உள்ளாட்சித்தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம். தி.மு.க. , அ.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. மு‌ல்லைப்பெரியாறு, ஸ்டெர்லைட் பிரச்னைகளில் ம.தி.மு.க. உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களிடம் ம.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடாது. இவ்வாறு வைகோ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை