உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறை: வால்பாறையில் காட்டுயானைகள் பள்ளிக்கட்டடத்தை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கோவை மாவட்டம் வால்பாறை சக்தி எஸ்டேட்டில் நேற்றிரவு 5 காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள துவக்க பள்ளி கட்டடத்தை சேதப்படுத்தின. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பீதியடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை விரட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி