உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை, துாத்துக்குடியில் 100 டிகிரி வெயில்

மதுரை, துாத்துக்குடியில் 100 டிகிரி வெயில்

சென்னை:தமிழகத்தில், மதுரை உட்பட மூன்று இடங்களில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.வரும், 15ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை மற்றும் இரவு நேரங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.மதுரை, 39; கரூர் பரமத்தி, துாத்துக்குடி, 38 டிகிரி செல்ஷியஸ் என, 3 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.ஈரோடு, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, 37; வேலுார், 34; சென்னை, 33; கோவை, தர்மபுரி, 32; கன்னியாகுமரி, 31; கொடைக்கானல், 22; ஊட்டி, 18 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, பந்தலுார், செருமுள்ளி, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை