உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 மின் நிலையத்தில் 420 மெகா வாட் பாதிப்பு

2 மின் நிலையத்தில் 420 மெகா வாட் பாதிப்பு

சென்னை:சென்னை அடுத்த அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், சென்னையின் தேவையை பூர்த்தி செய்கிறது. வடசென்னை மின் நிலையத்தின் மூன்றாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று நள்ளிரவு 12:41 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதே பிரச்னை காரணமாக, சேலம் மாவட்டம், மேட்டூர் மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய இரண்டாவது அலகில், நேற்று அதிகாலை 3:06 மணி முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை