உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இழக்கிறது அ.தி.மு.க.,

கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இழக்கிறது அ.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : 'இரும்புக் கோட்டை' என கூறி வந்த நிலையில், லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க., வெற்றி பெற முடியாதது, அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம், அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையாகவே இருந்தது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 'கொங்கு மண்டலம் அ.தி.மு.க.,வின் கோட்டை; யாராலும் அசைக்க முடியாது' என, கூறியிருந்தார்.ஆனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. இது கட்சியினர் மத்தியில் கடும் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க., வைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:

தமிழக தேர்தல் களத்தில் கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க.,வுக்கென தனி செல்வாக்குண்டு. அதனை மெல்ல மெல்ல இழந்து வருகிறது என்பதை நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வாயிலாக அறிய முடிகிறது. இதற்கான காரணத்தை கட்சித்தலைமை தீர விசாரிக்க வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலிலும் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பெற்ற ஓட்டுகள், வியக்க வைக்கின்றன. இதே வேகத்தில் அவர்கள் அரசியல் செய்தால், வரும், 2026 சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
ஜூன் 05, 2024 10:23

பரத் ரத்னா பொன்மனச்செல்வர் எம் ஜி ஆர் அவர்களால் துவங்கப்பட்டு, தொண்டர்களின் கடுமையான போராட்டங்களினால் வளர்க்கப்பட்டு தமிழக ஆட்சியில் இருந்த கட்சி. எம் ஜி ஆர் மறைவிற்கு பின்னர் எழுபதுகளில் போராடிய தொண்டர்கள் ஜெயலலிதாவால் தூக்கி வீசப்பட்டனர் அவரது தோழியாலும் எம் இ ஆர் காலத்து தொண்டர்கள் மதிக்கப்படவேயில்லை. ஆயினும் மனம் வெதும்பி கடனே என இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு போட்டனர். ஆனால் பி ஜெ பி கட்சியை தமிழகத்தில் வெரூஉன்ற செய்வதற்கு தென் மாவட்ட அருமை சகோதரி தமிழிசை எடுத்த முடிவுகள் எம் ஜி ஆர் தொண்டர்களை தாமரைக்கு மாற்றியது. இன்று தாமரை பெற்றுள்ள வாக்குகள் அன்றைய எம் ஜி ஆர் காலத்து ஆட்களின் வாக்குகள். இனிமேல் எவர் இரட்டை இலைக்கு வந்து பேசினாலும் இவர்களின் வாக்குகள் தாமரைக்கே


K.SANTHANAM
ஜூன் 05, 2024 07:05

எடப்பாடி அவர்கள் மஃர், ஜெயலலிதா போன்று தமக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக நினைத்து ஆடியதால் ஏற்பட்ட பலன் இது. காசு கொடுத்ததால் இப்போது வாங்கிய ஓட்டு இல்லாவிடில் டெபாசிட் கூட வாங்க முடியாது. காசு கொடுத்து பொதுக்குழு உறுப்பினர்களை வாங்கலாம். ஆனால் மக்களை வாங்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் நீங்க ஆட்சியில் செய்தது தற்போது அனுபவிக்கறீங்க. இனியாவது பழைய அதிமுக விசுவாசிகள் ஒன்று சேர்ந்து கட்சியை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையேல் வருகின்ற தேர்தல்ல பூஜ்யம் தான்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ