உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமையின்றி சிதையும் அ.தி.மு.க., : எம்.பி., கார்த்தி பேட்டி

தலைமையின்றி சிதையும் அ.தி.மு.க., : எம்.பி., கார்த்தி பேட்டி

காரைக்குடி : ''பாரம்பரியமான அ.தி.மு.க., தலைமையின்றி சிதைந்து வருகிறது'' என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இந்தியாவின் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க காங்., உறுதியாக இருக்கும். 'நீட்' தேர்வு முறையாக நடத்துவதில்லை. அத்தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து முதலில் எதிர்ப்பு வந்தது. தற்போது பிற மாநிலங்களும் தமிழகத்தின் வாதங்களை ஏற்கின்றன. 'நீட்' தேர்வில் எந்த அடிப்படையில் மதிப்பெண் தருகிறார்கள் என தெரியவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க., பாரம்பரிய கட்சியாக இருந்தது. இன்றைக்கு அக்கட்சி தலைமையின்றி சின்னாபின்னமாகி சிதைந்து வருகிறது. ஆந்திர அரசியலில் எதிரெதிராக இருக்கும் சந்திரபாபு , ஜெகன்மோகன் ஆகியோர் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது வித்தியாசமாக உள்ளது. நெருக்கடிக்கு அடிபணிந்து தான் ஆதரவு தெரிவிக்கின்றனர் எனறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை